Translate

தலைமுடி உதிர்வதற்கு தீர்வு


மன அழுத்தம், டென்ஷன், தூசி,  ரத்த சோகை, புரதச்சத்து குறைபாடு, ஹார்மோன் கோளாறுகள், தூக்கமின்மை அல்லது வேறு எதாவது நோய்க்கான
அறிகுறி போன்ற பல காரணங்களால் கொத்துக் கொத்தாகத் தலை முடி உதிர்கின்றன. சுத்தமின்மை, ஈரப்பதம், எண்ணெய்ப் பசை ஆகியன இன்றி  முடி வறண்டு உதிர்வதும் உண்டு.
தலைக்கு ஒழுங்காக எண்ணெய் வைப்பது, தலை குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதன் மூலம் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டையும் சேர்த்து இளஞ்சூடாக்கி,  தலையில்  தடவி விரல்களால் மசாஜ் செய்யலாம். ஒரு துண்டை வெந்நீரில் நனைத்துப் பிழிந்து தலையில் நன்றாக இறுக்கிக் கட்டி, அரை மணி நேரத்திற்குப் பிறகு தலைக்குக் குளிக்கவும். தினமும் தொடர்ந்து ஒரு வாரம் செய்துவர, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தலாம். தலைக்குப் புத்துணர்வு கிடைப்பதுடன் முடி வளர்ச்சியையும் தூண்டும்.  வெட்டிவேர் 10 கிராம், சுருள் பட்டை 100 கிராம், வெந்தயம் 2 டீஸ்பூன், விளாம் மர இலை 50 கிராம் இவற்றைக் கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு, ஒரு வாரம் தொடர்ந்து வெயிலில் வைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள்.  இந்தத் தைலத்தை சிறிது தேங்காய் எண்ணெயில் கலந்து தினமும் தலைமுடி வேர்க்கால் முதல் நுனி வரை தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முடி கொட்டுவது நின்று முடி கருகருவென வளரும்.  ஃப்ரெஷ் ஆவாரம் பூ, செம்பருத்தி, தேங்காய்ப் பால் தலா ஒரு கப் எடுத்து, வாரம் ஒரு முறை அரைத்து தலைக்குக் குளிக்கலாம்.  உடல் குளிர்ச்சியாவதுடன் முடி கொட்டுவது உடனடியாக நின்று கூந்தல் வளரத் தொடங்கும்.  டீத்தூள், மருதாணி பவுடர், வெந்தய பவுடர், கடுக்காய்த்தூள், தேங்காய் எண்ணெய், தயிர் இவற்றைத் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து, ஓர் எலுமிச்சம் பழத்தின் சாறைப் பிழிந்து ஊற்றி, இரவில் தயாரித்துக் கொள்ளுங்கள்.  மறுநாள் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவையுங்கள்.  குளியல் பவுடரைத் தேய்த்துக் குளித்தால், முடி உதிர்வது  நிற்பதுடன், முடி கருகரு எனச் செழித்து வளரும்.

இரக்கம் காட்டுபவன் - இளிச்சவாயன்
அக்கறை காட்டுபவன் - அதிக பிரசங்கி
மரியாதை தருபவன் - முட்டாள்
உதவி செய்பவன் - புழைக்க தெரியாதவன்
குரல் கொடுப்பவன் - வேலை வெட்டி இல்லாதவன்
என்று அர்த்தங்கள் மாறிவிட்டன...
சுய நலம் மிக்க இந்த சமுதாயத்தில்....!